பொங்கல் விழா - 2014
2014ம் ஆண்டிற்கான பொங்கல் விழா நேற்றைய தினம் (14.01.2014) மருத்துவ பீட மாணவர்களால் யாழ் மருத்துவ பீடத்தினில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அன்று காலை ஆரம்ப நிகழ்வாக 35ம் அணியினர் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து மதிய நிகழ்வுகள் பாரம்பரிய நிகழ்வுகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் அணிகளுக்கிடையிலான தாச்சி, சறுக்கு மரம் ஏறுதல், தலையணை சண்டை, முட்டி உடைத்தல், கண்கட்டி யானைக்கு கண் வைத்தல் மற்றும் சாக்கோட்டம் போன்ற இடம்பெற்றன. பார்வையாளர்களுக்கு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது. மாலை 6 மணியளவில் கலைநிகழ்வுகள் பொங்கல் விழா ஏற்பாட்டுக்குழு தலைவரின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. அதனை தொடந்து கவிதை, பாடல்கள், கோலாட்டம், விவாதம் மற்றும் பரிசளிப்பு என்பன இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு வைத்திய நிபுணர்களான திரு திருமதி அம்பலவாணர், வைத்தியர் பிரேமகிருஸ்ணா, வைத்தியர்கள், உடல்கூற்றியல் பிரிவு தலைவர் திருமதி நந்தினி உதயகுமார், உதவி பதிவாளர் சர்வேஸ்வரா (பட்டிமன்ற நடுவர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அனைவருக்கும் எடுத்துக்காட்டாக மருத்துவபீட மாணவர்களால் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வுகள் அனைவரினதும் பாராட்டினை பெற்றது குறிப்பிடத்தக்கது. நிகழ்வினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதி மற்றும் |
காலை பொங்கல்
நிர்வாகத்தினருக்கும் நிகழ்வினை சிறந்த முறையில் ஏற்பாடு செய்த ஏற்பாட்டு குழுவிற்கும் அவர்களுக்கு பக்கதுணையாக நின்ற அனைத்து மருத்துவ பீடமாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றிகள்.
எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் மேலும் மெருகூட்டலுடன் அனைவரின் பங்களிப்புடன் இடம்பெற வாழ்த்துக்கள்.
|
பாரம்பரிய நிகழ்வுகள்
கலைநிகழ்வுகள்
By: S. Pranavan & B. Paul Bright of 33rd batch
Photos by Praneev of 35th batch/media society - MSU
நேற்றைய தினம் (14-01-2014) "பொங்கல் விழா - 2014" இனிதே நிறைவேறியது.
இதில் ஓர் அங்கமான பாரம் -பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதையிட்டு மருத்துவ பீடாதிபதி உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிர்கள். நேரப்பற்றாக்குறை காரண-மாக நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்த கபடி, மெதுவான துவிச்சகரவண்டி ஓட்டம், சிலம்பாட்டம் போன்றவற்றை நடத்த முடியாததையிட்டு வருத்த-த்தை தெரிவித்து க்கொள்கிறோம். |
Random photos on the event
இதனுடன் நேரடி வர்ணனைக்குரிய சாதனங்களை உரிய நேரத்தில் பெற்றுகொள்ள முடியாமைக்கும் வருத்த-த்தை தெரிவிக்கின்றோம்.
அத்தோடு இவ் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வானது போட்டித்தன்மைக்கு அப்பால் கலகலபிற்கு குறை-வில்லாமல் இனிவரும் காலங்களிலும் தொடர்ச்சி-யாக நடைபெற வேண்டு-மென விரும்புகிறோம். இறுதியாக தோளோடு தோள் நின்று உதவிய அனைவர்-களுக்கும் மனமார்ந்த நன்றிகள். --விழா ஏற்பாட்டுக்குழு-- |